CCMC NEWS2 6.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதாள சாக்கடை திட்டப் பணியினை விரைவாக மேற்கொண்டு, சாலையினை சீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.வீரன், உதவி பொறியாளர்கள் திரு.ராஜேஸ்வேணுகோபால், திரு.ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர்கள் திரு.ரமேஷ், திரு.சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 06.05.2025.