CCMC NEWS3 16.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் சாலை, கஸ்தூரி கார்டன் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநகராட்சியின் சார்பில், ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.04.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் திரு.குமரன், மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம்பாஷா, திரு.செந்தில்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர் திரு.சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.