CCMC NEWS3 18-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.9-க்குட்பட்ட விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (18.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன், உதவி பொறியாளர்கள் திரு.குமார், திரு.ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.