CCMC NEWS3 27.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையில் தேங்கும் மழைநீரை விரைவில் வெளியேற்றும் வகையில் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிகால்களை விரைவில் தூர்வார அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் திரு.சரவணக்குமார், திரு.கமலக்கண்ணன், திரு.குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 27.05.2025.