CCMC NEWS3 6.5.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு, சிவாஜி நகர் அருகில் உள்ள சங்கனூர் ஓடை நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள (22 குடியிருப்புகள்) குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் வழங்குவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், உதவி நகர திட்டமிடுநர் திருமதி.சத்யா, மாமன்ற உறுப்பினர் திருமதி.அம்பிகா தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 06.05.2025.