CCMC NEWS4 1-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.76க்குட்பட்ட பேரூர் சாலை, தெலுங்குபாளையம் சாலை, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடுகள் வழங்குவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் நகரமைப்பு அலுவலர் திரு.குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, துணை மாநகரப்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு.ராஜ்குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.கோபாலகிருஷ்ணன், திரு.சத்தியமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.07.2025.