CCMC NEWS4 21.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.50க்குட்பட்ட புலியகுளம் சாலை, கேந்தரிவித்யாலயா பள்ளி அருகில் சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (21.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த சாலையினை உடனடியாக சீர் செய்ய அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.