CCMC NEWS4 23-6-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் (சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி) கட்டமைப்பின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர்கள் திரு.ராஜேஸ்வேணுகோபால், திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.06.2025.