CCMC NEWS5 28.4.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில், பாலக்காடு, ரயில்வே பாதைக்கு மேலேயும் பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடியிலும் பாலம் அமைத்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர்கள் திரு.குமரன், திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் திரு.அஸ்லாம்பாஷா, உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், திருமதி.கீதா தேவி(த.கு.வ.வா), உதவி பொறியாளர் திருமதி.சரண்யா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.04.2025.