CCMC NEWS5 4.6.2025

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.58க்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (04.06.2025) துவக்கி வைத்தார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திரு.முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் திரு.ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமித்ரா, உதவி பொறியாளர்கள் திரு.சக்திவேல், திரு.கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.