CCMC NEWS6 1-7-2025

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.67-க்குட்பட்ட சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாநகராட்சிப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (01.07.2025) தொடங்கி வைத்தார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனாலோகு, கல்வி குழுத்தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், மாநகர கல்வி அலுவலர் திரு.சி.தாம்சன், டைம்ஸ் இன்ஸ்டியூட் இயக்குநர் திரு.சிவகுமார், மரு.பாலாஜி (உயிரியல் பிரிவு), உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், பள்ளி தலைமையாசியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.