CCMC NEWS6 26.5.2025

மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (26.05.2025) தென்மேற்கு பருவமழை தொடர் தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பேரூர் சாலை, ஆண்டிபாளையம் பிரிவு அருகில் நொய்யல் ஆற்றிலிருந்து ராஜவாய்க்கால் வழியாக உக்கடம் குளத்திற்கு உபரி நீர் செல்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பேரூர் சாலை நொய்யல் ஆற்றின் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திரு.இரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், மாநகர துணை பொறியாளர் திரு.இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ராம்குமார், பொது சுகாதாரக்குழுத்தலைவர் திரு.பெ.மாரிசெல்வன், உதவி ஆணையர் திரு.குமரன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர் திரு.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.