CCMC NEWS7 6.5.2025
.jpg)
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில், பாலக்காடு, ரயில்வே பாதைக்கு மேலேயும் பொள்ளாச்சி ரயில்வே பாதைக்கு அடியிலும் பாலம் அமைத்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குறிச்சி - குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு இராட்சத கிரேன் உதவியுடன் இரும்பிலான பாலம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தலைமை பொறியாளர் திரு.விஜயகுமார், உதவி ஆணையர் திரு.குமரன், உதவி கோட்டப்பொறியாளர் (ரயில்வே) திரு.புஷ்பதாஸ், முதுநிலை பகுதி பொறியாளர் (ரயில்வே) திரு.சக்திவேல், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், திருமதி.கீதா தேவி(த.கு.வ.வா), மாமன்ற உறுப்பினர்கள் திரு.அஸ்லாம்பாஷா, திரு.உதயகுமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் திரு.சபரிராஜு, திருமதி.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர் 06.05.2025.